டெல்லி: மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் நினைவில் நிற்கும் என பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நான் தமிழ்நாடு பயணம் செய்யும்போதெல்லாம் ஜெயலலிதா மீது மக்கள் வைத்துள்ள அன்பை காண முடிகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பங்கேற்றார் என பிரதமர் மோடி கூறினார்.
