பாலக்காடு,பிப்.8: பாலக்காடு அருகே தூங்கி கொண்டிருந்த 6 வயது மகனை எழுப்பி குளியலறைக்கு அழைத்து சென்று கழுத்தறுத்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு புதுப்பள்ளித் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (35). டாக்ஸி டிரைவர். இவரின் மனைவி ஷஹீதா (32). பள்ளிவாசலில் அரபி ஆசிரியை. தம்பதிக்கு 11 வயது, 8 வயது மற்றும் 6 வயதில் 3 மகன்கள் இருந்தனர். நேற்று முன்தினம் சுலைமான் 2 மகன்களுடன் ஒரு படுக்கை அறையில் தூங்கினார். ஷஹீதா 6 வயது மகனுடன் வேறு ஒரு அறையில் தூங்கினார். நேற்று அதிகாலை 3 மணயளவில் ஷஹீதா தன்னுடன் தூங்கி கொண்டிருந்த சிறுவனை எழுப்பி குளியலறைக்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.