நெல்லை, பிப். 5: நெல்லை தொழிலதிபர் போஸ்பாண்டியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நெல்லை தொழிலதிபர் புருஷோத்தமன் என்ற போஸ் பாண்டியன்- சொர்ணலதா தம்பதியினரின் மகன் சபரிநாத் போஸ், மேலக்கடையநல்லூர் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் காளிராஜ்-செல்வராணி தம்பதியினரின் மகள் சண்முகப்பிரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பாளை கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் ஆறுமுக பாண்டியன்,