சென்னை: லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.10 கோடி தொகையை திருப்பித் தர கூடுதல் அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பணம் திரட்ட கூடுதல் அவகாசம் வேண்டும் என விஷால் முன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
