மனைப்பிரிவு வரன்முறை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை, பிப்.5: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்துதலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபிக்க 28.2.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் உள்ள ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனை பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு ஏற்கனவே உள்ள அரசாணை எண்.78 மற்றும் 172ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 28.02.2020 வரை கால நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையவழி மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும். www.tnlayoutreg.in என்ற வலை தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: