துறையூர் அருகே கோட்டாத்தூரில் குடிநீர் வழங்க கோரி மக்கள் சாலை மறியல்

துறையூர், பிப்.4: துறையூர் அருகே கோட்டாத்தூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக சீரான முறையில் கூட்டு குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து  கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர் அருகே உள்ளது கோட்டாத்தூர் கிராமத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தினமும் 4 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறி கோட்டாத்தூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மாத காலமாகவே 30 நிமிடம் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 25 நாட்களாகவே குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் துறையூர் கோட்டாத்தூர் சாலையில் அமர்ந்து குடிநீர் உடனடியாக வழங்க வேண்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் துறையூர் தாசில்தார்செல்வம் ஆகியோர் காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .

Related Stories: