அரியலூர், பிப்.4: அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்மணி மற்றும் நலவாழ்வு துணை இயக்குனர் மருத்துவர் ஹேம்சந்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். தடுப்பூசி சுகாதாரத்துறை முழுவதும் எடுத்துக்கொண்ட பின்னர், தற்போது காவல்துறைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் இடையை உள்ள அச்சத்தை போக்கும் விதமாக அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் தடுப்பூசி எடுத்துக் போட்டுக்கொண்டார். இதேபோன்று ஜெயங்கொண்டம் டிஎஸ்பி. தேவராஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.