- ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கூட்டுறவு சங்கத்தில், செயலாளருடன் ஏற்பட்ட மோதலால், துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தை பூட்டி சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே மெய்யூர் கிராமத்தில் ஜெஜெ 601 என்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில், கூட்டுறவு சங்க இயக்குனர்களாக அதிமுகவை சேர்ந்தவர்கள் 7 பேரும், திமுகவை சேர்ந்த 2 பேரும், மா.கம்யூ. மற்றும் பிஜேபியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கூட்டுறவு சங்க தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவராமன், துணைத்தலைவராக நிஷாநந்தினி மதன்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.