தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: திராவிட மாடல் 2.0வில் கலைஞர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000-ம் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000ஆகவும் வரவு வைப்பு. தேர்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 வழங்கப்படும். உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்; ஆனால் நமது திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது.

 

Related Stories: