பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று முன்தினம் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடினர். இந்த நிலையில் அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில் இருந்த அதே நபர், அதே சட்டையுடன், அதே பைக்கில் வந்திருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் போரூரை சேர்ந்த மோகன் (32) என்பதும், சரியான வேலை கிடைக்காததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.