டெல்லி: ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போதுள்ள சேவை விதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் ஆகியவை உள்ளடக்கிய புதிய விதிகளை அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
