அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: வர்த்தக செயலாளர் விளக்கம்

நியூரம்பர்க்: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம், பால் பண்ணை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறி உள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் நேற்று கூறியதாவது: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திலும் முக்கிய துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால் (எரிபொருள்), புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி போன்ற முக்கிய விவசாய, பால் பொருட்களை இந்தியா முழுமையாக பாதுகாத்துள்ளது. இந்த பொருட்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கியமானவை என்பதால், அமெரிக்காவுக்கு எந்த வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக அறிக்கையை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்ற பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் இறுதிக்கும் இது இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: