தொண்டாமுத்தூர்,பிப்.4:கோவை பாரதியார் பல்கலை கழகம் முதல் மருதமலை அடிவாரம் வரை சாலையோரம் அடர்த்தியாக வளர்ந்துள்ள புதர்களில் காட்டுப்பன்றிகள் பதுங்கியிருப்பதால் அசம்பாவிதம் நேரும் முன்பாக புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்றுமுன்தினம் தைபூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டுதோறும் தைபூசத்திருவிழாவையொட்டி கோவைநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக மருதமலை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் 8ம் தேதி தைப்பூசம் வரஇருப்பதால் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே காப்பு கட்டி விரதம்மேற்கொண்டு வருகின்றனர்.கோவை புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசிபுரம், ஆலாந்துறை, மத்வராயபுரம் கோவை புறநகர் தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மருதமலை பாதயாத்திரைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பகல் பொழுதை விட இரவிலேயே நடைபயணம் மேற்கொள்வர்.