அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கல்லூரி ஆக்கிரமித்துள்ள நிலங்களை விரிவாக அளவீடு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை

 

சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கல்லூரி ஆக்கிரமித்துள்ள நிலங்களை விரிவாக அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோனம்பேடு பொதுநலச் சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியில் உள்ள தம்பிதுரையின் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி, நிலத்தை ஆக்கிரமித்து விடுதி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: