கோவில்பட்டி, பிப். 3: விளாத்திகுளம் அருகே கல்லூரணியைச் சேர்ந்த உத்தண்டராமன் மகன் முத்து சீதாராமன் (36). விவசாயியான இவர், கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். கோவில்பட்டி அடுத்த தெற்கு திட்டங்குளம் அருகே சென்றபோது மறித்த 3 பேர், சரமாரியாகத் தாக்கியதோடு அவரிடமிருந்து செல்போன், ரூ.2 ஆயிரம், பைக் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். புகாரின் ேபரில் வழக்குப் பதிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.