சபரிமலை தங்கம் திருட்டு காங்கிரஸ் எம்பி விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தொடர்புடைய உண்ணிகிருஷ்ணன் போத்திக்கும் காங்கிரஸ் எம்.பி.யும், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளருமான அடூர் பிரகாஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் அடூர் பிரகாஷிடம் நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று 3 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் உள்ள தொடர்பு பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: