சென்னை: தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும், கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சியுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
