ஒட்டன்சத்திரம், பிப்.2: ஒட்டன்சத்திரத்தில் பைனான்சியர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டன்சத்திரம் மிச்சம்பட்டி கஸ்தூரி நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி(38). பைனான்சியர். இவரது மனைவி ரமணி(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது ரமணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த முத்துச்சாமி வீட்டுக்கு வந்து பார்த்த ரமணி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.