பைனான்சியர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஒட்டன்சத்திரம், பிப்.2: ஒட்டன்சத்திரத்தில் பைனான்சியர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டன்சத்திரம் மிச்சம்பட்டி கஸ்தூரி நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி(38). பைனான்சியர். இவரது மனைவி ரமணி(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது ரமணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த முத்துச்சாமி வீட்டுக்கு வந்து பார்த்த ரமணி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த சார்பு ஆய்வாளர் சூரியகலா தலைமையிலான போலீசார் பிரேதத்தை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமணி பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: