6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பரப்புரை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலக அண்ணாமலை விருப்பம்

6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பரப்புரை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தந்தையின் உடல்நிலை காரணமாக அடிப்படை கட்சிப் பணியை செய்ய முடியாத நிலையில் உள்ளேன். எனது நிலை குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறியுள்ளேன். சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு வேறு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : அண்ணாமலை தெரிவித்தார்.

Related Stories: