குன்னூர், பிப்.2: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 11 மாதங்கள் கழித்து மீண்டும் படகு சவாரி துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குன்னூர் சுற்று வட்டாரத்தில் பறவைகள் அதிகளவில் காணப்படும் பகுதி சிம்ஸ் பூங்கா ஆகும். இங்கு நூற்றாண்டு பழமையான மரங்கள், செடிகள் அதிகமாக உள்ளன. ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, பூங்காக்கள் பூட்டப்பட்டன.