திருப்புத்தூர், ஜன.30: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் பெருமாள்-கோதை நாச்சியாருக்கு இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. கோதை நாச்சியார் தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவத்தையொட்டி கடந்த 26ம் தேதி ஆண்டாள் பெரியசன்னதி எழுந்தருளி, இரவு ஸ்ரீபெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெற்றது. 2ம் நாளன்று ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெற்றது. தொடர்ந்து தைலம் சாத்துதல், ஆண்டாளுக்கு நவகலச அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெற்றது. திருவீதி புறப்பாடு நடந்தது. 3ம் நாளன்று ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடந்தன. தொடர்ந்து தைலம் சாத்துதல், ஆண்டாளுக் நவகலச அலங்கார சவுரித் திருமஞ்சனமும், ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும், மணவாளமாமுனிகள் கைதலத்தில் எழுந்தருளி கோதைநாச்சியாரை கடாஷித்தலும் நடந்தது. 4ம் நாளான நேற்று ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், ஆண்டாள் முத்துக்குறி பார்த்தலும் நடந்தது.