தென்காசி, ஜன.30: தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். நகர திமுக செயலாளர் சாதிர், வக்கீல்கள் ஜெகதீசன், ராஜா, முகம்மது ரபி, ஜான் தாமஸ் கேண்டர், அய்யாக்காளை முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் முருகன், முத்துராமலிங்கம், ஆலடி மானா, ராஜா, ஜெயக்குமார், பிரபாகரன், அன்புச்செல்வன், கண்ணன், செல்லத்துரை, ரகுமான் சாதத், கண்ணன், கருப்பசாமி, பாண்டித்துரை, சிவக்குமார், அலெக்சாண்டர், வளன் ராஜா, ராஜு, பிரவீன் ராம்,காளிராஜ், விஜயகுமார்,ராமர் பாண்டி,பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, வல்லம் செல்வம், ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் ஷேக்பரீத்,பால்ராஜ், சுப்பிரமணியன், ராமராஜ், பரமசிவன், ஆயிரப்பேரி முத்துவேல், மாரியப்பன், கேசவ ராம்சிங், நன்னை சுந்தர், சுரேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.