பெரம்பலூர்,ஜன.29: அரசுத்துறை அலுவலகங்கள் முற்றுகை, ஆர்ப்பாட்டங்களை முன்கூட்டியே தடுப்பதற்காக போலீசாரின் ஒத்திகை பெரம்பலூரில் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள் முன் காவல்துறையின் அனுமதிஇன்றி வன்முறை ஏற்படும் விதத்தில் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் திடீர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் முன்னிலையில், பெரம்பலூர் சட்டம்-ஒழுங்கு டிஎஸ்பி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், இன்ஸ்பெக்டர்கள் பெரம்பலூர் பால்ராஜ், டிராபிக் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தமிழ்ச்செல்வி, ராம்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சக்திவேல் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆயு தப்படை போலீசார் கலந்து கொண்டனர்.