மாணவிகள் விடுதியை அதிகாரி ஆய்வு தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜன.29: தண்டராம்பட்டு அருகே உள்ள மாணவிகள் விடுதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் உண்டு உறைவிட பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.  அப்போது, விடுதி கட்டிடம் தூய்மையாக உள்ளதா? மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என பார்வையிட்டார். ஆய்வின்போது, தன்னார்வலர் தொண்டு நிறுவன பள்ளி கண்காணிப்பாளர் அன்பரசி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: