வந்தவாசி, ஜன.29: வந்தவாசி அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தில் விவசாயி விஷத்தில் தற்கொலை செய்து கொண்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்(60), விவசாயி. இவர் கடந்த ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாததால் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வாறு சிகிச்சை பெற்று குணமாகாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 17ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். இதனால், விரக்கியடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.