சிவகங்கை, ஜன.29: சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், தயாநிதி, செந்தில்குமார், பேச்சிமுத்து, பிரியதர்ஷினி மற்றும் முத்திரை ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் காளையார்கோவில் வராச்சந்தையில் திடீர் ஆய்வு நடத்தினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள்-10, மேஜை தராசுகள்-7, விட்டத்தராசுகள்-10, இரும்பு எடைக்கற்கள் 65, அளவைகள் 5 மற்றும் தரப்படுத்தப்படாத எடைகள்-4 என மொத்தம் 101 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.