அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை, ஜன.29:  தேவகோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. தேவகோட்டை தாலுகா மேலக்கடியாவயல், கீழக்கடியாவயல், கொத்தனிக்கோட்டை, தச்சகுடி, கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பூரண புஷ்கலாதேவி சமேத ஸ்ரீ மகா சாத்தைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கீழக்கடியாவயல் கிராமத்தில் அமைந்துள்ள இக் கோவிலின் பரிகார தெய்வங்களுக்கு புதிதாக கோவில் மற்றும் விக்ரகங்களும் அமைக்கப்பட்டது.

 25ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், நித்ய பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வேதபாராயணங்கள், திருமுறைப் பாராயணங்கள், நாதஸ்வர கீதங்கள் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்வில் சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசங்களில் ஊற்ற பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: