தேவகோட்டை, ஜன.29: தேவகோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. தேவகோட்டை தாலுகா மேலக்கடியாவயல், கீழக்கடியாவயல், கொத்தனிக்கோட்டை, தச்சகுடி, கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பூரண புஷ்கலாதேவி சமேத ஸ்ரீ மகா சாத்தைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கீழக்கடியாவயல் கிராமத்தில் அமைந்துள்ள இக் கோவிலின் பரிகார தெய்வங்களுக்கு புதிதாக கோவில் மற்றும் விக்ரகங்களும் அமைக்கப்பட்டது.