கமுதி, ஜன.29: கமுதி அருகே பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கமுதி அருகே அபிராமத்தில் வசித்து வருபவர் வீரணன். இவரது மனைவி சிவா(26). இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அபிராமத்தில் தனது வீட்டில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவர் வீரணன் கொடுத்த புகாரின் பேரில், அபிராமம் போலீசார் குடும்ப பிரச்னை காரணமாக தூக்குப்போட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்து கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிவாவின் உடலை அனுப்பி வைத்தனர்.