வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

புவனகிரி, ஜன. 23: பீகார் மாநிலம் முஸ்தாபூர் மாவட்டம் ஆனந்தகர்ஜா பகுதியைச் சேர்ந்தவர் அமோத்சிங்(42). இவர் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பவர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமோத்சிங், பரங்கிப்பேட்டையில் தான் தங்கியிருந்த வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமோத்சிங் உறவினர் சஞ்சய்பிரசாத், பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: