ஆவடி: ஆவடி அடுத்த அய்யப்பாக்கம், வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செண்பகம். இவரது கணவர் முனிசாமி இறந்துவிட்டார். இவர்களுக்கு காளிதாஸ் (22), கணேஷ் (14), ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். காளிதாஸ், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 25ம் தேதி உறவினரின் திருமணத்துக்கு செண்பகம் சென்றார். அன்று காளிதாசும் வேலைக்கு சென்றுவிட்டர். கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். காளிதாஸ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணேஷ் வீட்டில் இல்லை.