ராஜபாளையத்தில் ெதாடர்மழையால் நீரில் மூழ்கிய நெல் பயிருக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், ஜன. 28: ராஜபாளையம் அருகே தேவதானம் தேரடி அருகே திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்பி தனுஷ்குமார், எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் தாலுகாவில் தொடர்மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தேவதானம் பெரிய கோயில், அழகிய நாயகி அம்மன் கோயில், மாயூரநாத சாமி கோயில் நிலங்கள், சமுதாய நிலங்களை கணக்கீடும் கால அளவை நீட்டிக்க வேண்டும், 2018ல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட தென்னை மர விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர பொறுப்பாளர் மணிகண்டராஜா, மகளிர் அணி அமைப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Related Stories: