காரைக்குடி, ஜன.28: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் வரவேற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இணையவழியில் துவக்கி வைத்து பேசுகையில், சமுதாய வானொலி திட்டம் மூலம் அந்தப்பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் பேரிடர் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமுதாய வானொலி பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 310 சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகிறது, இதில் 40 நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.