திண்டுக்கல், ஜன.28: பண்ணைகாட்டில் நடந்த மாநில பூப்பந்தாட்ட போட்டியில் பிஎஸ்என்ஏ, ஜிடிஎன் கல்லூரி அணிகள் கோப்பையை வென்றன.
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைகாட்டில் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடந்தது. பெண்கள், ஆண்கள் என இரு பிரிவுகளாக நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சென்னை, கரூர் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி அணியும், மதுரை ஓசிபிஎம் அணியும் மோதின. 31-35, 35-33, 35-33 என்ற புள்ளி கணக்கில் பிஎஸ்என்ஏ கல்லூரி அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் இடம் மதுரை அணியும் மூன்றாமிடம் எம்விஎம் கல்லூரி அணியும் பிடித்தன.