கோவில்பட்டி, ஜன. 28: கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் அஜித்குமார் (30). இவர் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார்.
இவர் விடுமுறையில் நண்பரை பார்க்க பைக்கில் சிவகாசி சென்றார். அப்போது ஊரில் தாத்தா இறந்த செய்தி அறிந்து பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நேற்று மதுரை - நெல்லை நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.