வைகுண்டம், ஜன.28: வைகுண்டத்தில் பார்வர்ட் பிளாக் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் வை சுரேஷ் தலைமை வகித்தார். கால்வாய் முத்துராமலிங்கம், சிவராம் கார்த்திக், கொம்பையா பாண்டியன், ராமசாமி, துரை சரவணன், உடையார் பாண்டியன், சங்கர், மணி முன்னிலை வகித்தனர். தேசிய செயலாளர் தேவராஜன், மாநில தலைவர் முத்துராமலிங்கம், சுப்புராஜ், நல்லமுத்து, வெங்கடேஷன், ராதா நாச்சியார், பாலு, காளிமுத்து, பூவலிங்கம், மாரி, சரவணன் உள்பட பலர் பேசினர். மாநில இளைஞரணி தலைவர் வை சுரேஷ் பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சி அங்கம் வகிக்கிற கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சி அமைக்கும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.