மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7வது சுற்றின் முடிவில் 678 காளைகள் களம் கண்டன. இதில் 122 மாடுகள் பிடிபட்டன. 12 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.6வது சுற்றின் முடிவில் பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித் 12 காளைகளை அடக்கியுள்ளார். பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளையும் நாமக்கல் கார்த்தி 11 காளைகளையும் பிடித்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 5 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 4, பார்வையாளர்கள் 4 பேர் என 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
