நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி

திருமங்கலம், ஜன. 27: கள்ளிக்குடி அருகே, கள்ளிப்பட்டி மெயின்ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஹெல்மெட்டுடன் முகமூடி அணிந்த 4 பேர், இரு டூவீலர்களில் வந்து டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பூட்டை உடைத்தனர். ஆனால், உடைக்க முடியவில்லை. உடனே அருகில் முத்தூட் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், அக்கம்பக்கத்தினர் வந்தனர். இதைப் பார்த்த முகமூடி நபர்கள் தப்பியோடினர். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்ததில் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: