விருதுநகர்,ஜன.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் ஒன்றியம் புதூர் ஊராட்சி தலைவர் ராமலட்சுமி மனு அளித்தார். இதன் பின் அவர் கூறுகையில், ``ராஜபாளையம் ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் புத்தூர், வாழவந்தாள்புரம், வேதநாயகிபுரம் கிராமங்கள் உள்ளன. 9 வார்டு உறுப்பினர்களை கொண்ட ஊராட்சியின் தாழ்த்தப்பட்ட பெண் தலைவர் என்பதால் என்னை மற்ற சமூகத்தினர் மிரட்டுகின்றனர். ஊராட்சியின் செயலாளர் நீராவி, தனக்கு வேண்டிய ஆறுமுகத்தாய் என்பவரை 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணித்தளப் பொறுப்பாளராக வைத்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தளப்பொறுப்பாளரை 100 நாட்கள் முடிந்ததும் மாற்ற வேண்டும்.