கமுதி, ஜன.26: கமுதி இருளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கோவில் முன்பு பிரம்மாண்டமாக பந்தல் போடப்பட்டு, அதில் யாக சாலை, அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டன. அப்பகுதி முழுவதும் தோரணங்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி பூஜை, லட்சுமி, நவக்கிரகம் ஹோமங்கள் நடைபெற்றது. மாலையில், கணபதி பூஜை, பாலிகை இடுதல், கும்ப அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.