டூவீலர் விபத்தில் இளம்பென் பலி

சோழவந்தான், ஜன. 26:  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயன் (31), தனது மனைவி அன்னலட்சுமி (21), குழந்தை யாழினி (1) ஆகியோருடன் டூவீலரில், விக்கிரமங்கலம் அருகே, தெப்பத்துப்பட்டியில் உறவினர் இல்ல விழாவில் பங்கேற்க நேற்று வந்தார். விழா முடிந்தபின், நேற்று இரவு டூவீலரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கீழப்பட்டி அருகே, டூவீலரில் இருந்து அன்னலட்சுமி நிலைதடுமாறி, குழந்தையுடன் தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அன்னலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை யாழினி உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: