குன்னூர், ஜன. 24: நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பசுமையான புல்வெளிகள், மலைகள் உள்ளிட்ட இடங்களில் பரவலாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இதில், குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெறாத பல்வேறு மொழி திரைப்படங்களே இல்லை என்றால் மிகையாகது. அதன் பின் ஊட்டியில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் சினிமா படங்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் நீலகிரியில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவது குறைந்தது. ஆண்டுக்கு 5 முதல் 10 படங்களின் சூட்டிங் மட்டுமே நடைபெறுகிறது. தற்போது குறைந்த அளவிலான படப்பிடிப்புகளே நடத்தப்படுகிறது.