மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.21: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவச லேப்டாப் வழங்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 3 ஆண்டுக்கு மேல் ஆகியும் லேப்டாப் வழங்கவில்லை. தற்போது 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வழியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: