அறந்தாங்கி, ஜன.21: அறந்தாங்கி அருகே தூக்கிட்டு இறந்த பெண்ணின் சடலத்தை பெற்றோருக்கு காட்டாமல் சடலத்தை எரித்ததாகக்கூறி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி அருகே உள்ள களக்குடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் (32). விவசாயி. இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை குடும்பத் தகராறு காரணமாக நந்தினி வீட்டில் தூக்கிட்டு தொங்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சடலம் அரசுக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் களக்குடிதோப்பு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.