சங்கரன்கோவில், ஜன. 21: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவிலில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தனுஷ் குமார் எம்.பி., பூங்கோதை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர், முன்னாள் எஸ்பி குணசேகரன் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகரச் செயலாளர் சங்கரன் வரவேற்றார். இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்டோர் அதிமுக ஆட்சியில் நிலவும் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி மனுக்கள் அளித்தனர். அத்துடன் அதிமுக ஆட்சியை நிராகரிப்பதாகக் கூறினர். மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், உங்களின் குறைகள் அனைத்தும் தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் விவசாய அணி மாநில துணைஅமைப்பாளர் அப்துல்காதர், ஒன்றியச் செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், ராஜா தலைவர், சேர்மத்துரை, கடற்கரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், அன்பழகன், சீனித்துரை, அழகுசுந்தரம், மாரிவண்ணமுத்து, குமார், செல்லதுரை, நகரச் செயலாளர்கள் சாதீர், ராஜகாந்த், பேரூர் செயலாளர்கள் பவுல்ராஜ், ஜெயபாலன், மந்திரம், ஜெகதீசன், நெல்சன், லட்சுமணன், பொன்சுந்தரம், மாரியப்பன், முத்தையா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புமணி கணேசன், ராஜதுரை, மாரிமுத்து,