நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 60 சதவீதம் பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டது.சமூக இடைவெளியுடன் மாணவ,மாணவிகள் அமர வைக்கப்பட்டனர்.முதல் நாளான நேற்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெகராஜ், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுப்பிரமணியன் ஆகியோர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.