நெல்லை, ஜன.20: கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகளுக்கான கூட்டம் மற்றும் கருத்து கண்காட்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுபண்ணைய திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் நடப்பு ஆண்டில் 125 உழவர் ஆர்வலர் குழுக்கள், 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை மூலம் 40 உழவர் ஆர்வலர் குழுக்கள், 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, ஒரு குழுவுக்கு 5 லட்சம் வீதம் பண்ணை இயந்திரங்கள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.