மதுரை: கடனை திருப்பி செலுத்தவில்லை என்றல் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடன் தொடர்பாக பிற்பகல் 2.15 மணிக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிலளிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கடன் தொகை ரூ.21.78 கோடியை ஞானவேல் ராஜா திருப்பி செலுத்தாததால் ‘வா வாத்தியார்’ படத்துக்கு தடை விதித்துள்ளது.
