கலசபாக்கம், ஜன.13: கலசபாக்கம் அருகே கடலாடி ஆதமங்கலம் கிராமங்களில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலசபாக்கம் வட்டத்தில் எருது விடும் விழா மார்கழி 1ம் தேதி முதல் தை மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஆதமங்கலம் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.