பொன்னேரி: மீஞ்சூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை அருகே வாலிபர் ஒருவரை கஞ்சா போதையில் 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என மீஞ்சூர் பஜார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா மேற்பார்வையில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.