11 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி,ஜன.12: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 57 ஆக உயர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 11 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில்,  பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில்  7 ஆயிரத்து 924 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 86 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.

Related Stories: